குண்டும், குழியுமான சாலை

Update: 2024-01-07 11:45 GMT

கோவை மலுமிச்சம்பட்டி அவ்வை நகரில் இருந்து போத்தனூர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக மழை நேரத்தில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் சாலையை சீரமைக்க முன்வரவில்லை. இனிமேலாவது அந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்