தார்சாலை வேண்டும்

Update: 2023-12-31 10:52 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் மகாராசபுரம் மேல்பாதி பகுதி வேதாரண்யம்-நாகை மெயின் சாலை அருகே 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்துகின்றனர். மழைக்காலங்களில் பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. சேற்றில் பள்ளி வாகனங்கள் சிக்கிக்கொள்கின்றன. பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து தார் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்