சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-31 08:48 GMT

ராஜாக்கமங்கலம் முதல் நிலை ஊராட்சிக்கு உட்பட்ட ஆடராவிளையில் இருந்து மேல ஆடராவிளை, வருக்கத்தட்டு, எள்ளுவிளை வழியாக சட்டுவன்தோப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், மழை நேரங்களில் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.


மேலும் செய்திகள்