விபத்து அபாயம்

Update: 2023-12-31 08:46 GMT

மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் இருந்து தொடங்கி குழித்துறை வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த மேம்பாலத்தின் சாலையில் ஆங்காங்கே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்