பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2023-12-24 16:58 GMT

கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் பூமாலை வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வளாகத்தின் எதிர்புறம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மதுபாட்டில்கள் வாங்க வரும் மது பிரியர்கள், பூமாலை வணிக வளாகம் அருகில் அமர்ந்து மது குடிக்கிறார்கள். இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மது பிரியர்கள் பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்