விபத்து அபாயம்

Update: 2023-12-24 08:37 GMT

பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திட்டுவிளையில் இருந்து மார்த்தால் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர், சீரமைப்பு பணிகள் முடிந்த பிறகு பள்ளத்தை மூடவில்லை. இதனால், அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி தொற்றுநோய் பரவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே விபத்தை ஏற்படுத்தும் பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்