சென்னை சூளைமேடு, பெரியார் தெருவில் உள்ள தனியார் பள்ளி எதிரில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் தினந்தோறும் ஏராளமான இருசக்கர வாகனங்கள் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், மழை காலங்களில் பள்ளம் தெரியாமல் அதிகமானோர் கீழே விழுகின்றனர். தொடர் விபத்துக்கள் நடப்பதால் சாலையை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்களா?