சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-10 14:05 GMT

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள பேவர்பிளாக் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி நிரம்பியது. எனவே அதனை சீரமைப்பதற்காக பேவர்பிளாக் கற்களை அகற்றி குழி தோண்டினர். பின்னர் அந்த பணிகளை கிடப்பில் போட்டதால், சாலையில் பேவர்பிளாக் கற்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்

மேலும் செய்திகள்