சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-12-10 13:47 GMT

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை வடக்கு தெருவில் முதல் மன்மதீஸ்வரன் கோவில் வரையிலான சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலை வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்