புதிய சாலை தேவை

Update: 2023-12-10 13:47 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி மகராசபுரம் மேல்பாதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் ஒற்றையடிப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல கூட சாலை இல்லை. இதனால் ஆற்று நீருக்குள் இறங்கி உடல்களை எடுத்து செல்லும் நிலை உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக சாலை அமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்