சாலை வசதி வேண்டும்

Update: 2023-12-10 13:46 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் மணல்மேடு பகுதியில் முதியோர் இல்லம் அமைந்திருக்கும் பகுதியில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்குவதால் சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. முதியோர்களும் மிகுந்த சிரமத்துடன் முதியோர் இல்லத்துக்கு சென்று வருகின்றனர். வாகன ஓட்டிகளும் இதனால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்