வத்திராயிருப்பில் விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சேதமடைந்த சாலையில் தண்ணீர் தேங்கி பக்தர்கள் நடக்க சிரமப்படுகின்றனர். பக்தர்களின் நலன்கருதி இந்த சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.