சீரமைக்கப்படாத சாலை

Update: 2023-12-10 11:38 GMT

கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி கத்தாளப்பட்டி ஐந்து ரோடு பகுதியில் இருந்து செல்லிபாளையம், ரெங்கபாளையம் வழியாக உப்பிடமங்கலத்திற்கு தார் சாலை செல்கிறது. இந்த சாலையில் ஐந்து ரோடு பகுதியில் இருந்து உப்பிடமங்கலம் பேரூராட்சி எல்லை ஆரம்பம் வரை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் அந்த குழிகளில் மழைநீர் தேங்கி நின்று சேறும், சகதியுமாக மாறி சாலையை மேலும் சேதம் அடைய வைக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்