சேறும் சகதியுமான சாலை

Update: 2023-12-03 17:42 GMT
குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு எல்லப்பன்பேட்டை கிராமத்தில் பல ஆண்டு காலமாக சாலை வசதி இல்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும், போராட்டங்கள் நடத்திய பிறகும் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணி முழுமை பெறாமல், தற்போது பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்