குண்டும், குழியுமான சாலை

Update: 2023-12-03 17:01 GMT

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உலிபுரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே அமைக்கப்பட்டுள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தான் உலிபுரம் புதூர், நாரைக்கிணறு, ராசிபுரம், முள்ளுக்குறிச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலையால் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலத்தில் பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்