சேதமடைந்த சாலை

Update: 2023-12-03 12:46 GMT

சிவகாசி ரெயில் நிலையத்திலிருந்து செங்கமலநாச்சியார்புரம் செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக இந்த பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்