சேறும், சகதியுமான சாலை

Update: 2023-11-26 18:08 GMT

திருச்சி மாவட்டம், கீழ் கல்கண்டார்கோட்டை, எஸ்.ஆர்.எம். அவென்யூ நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான தார் சாலை வசதிகள் இல்லாததால் மண் சாலைகள் தற்போது பெய்த மழையால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்