சாலை வசதி வேண்டும்

Update: 2023-11-26 17:56 GMT
மரக்காணம் அருகே ஆலத்தூர் கிராமத்தில் உள்ள 3-வது வார்டில் சாலை வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மண்சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டதால், வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சேற்றில் வழுக்கி கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் அப்பகுதியில் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்