நாமக்கல் ராசிபுரம், ஆண்டகலூர் கேட்டில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையின் நடுவில் சிறிது தூரம் வரை மட்டும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சாலையின் நடுவில் வெள்ளை கோடுகள் வரையப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி சென்று வருகின்றனர். எனவே சாலையில் வெள்ளை கோடுகள் வரைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.