மாணவர்கள் அவதி

Update: 2023-11-19 15:12 GMT

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா லட்சுமியாபுரம்-வன்னியம்பட்டி செல்லும் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக பஸ், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் இந்த சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டி இருக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்