வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-11-19 13:55 GMT

ஈரோடு-கரூர் செல்லும் பிரதான ரோட்டில் கணபதிபாளையம் நால்ரோடு உள்ளது. இந்த பகுதியில் கார், ஆட்டோ போன்ற சிறிய வாகனங்கள் முதல் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் வரை அதிக அளவில் சென்று வருகின்றன. நால்ரோடு சந்திப்பு என்பதால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் இங்கு பயணிகள் நிழற்குடை மற்றும் பொது கழிப்பறை வசதி அமைத்துத்தர வேண்டும்.

மேலும் செய்திகள்