சீரமைக்கப்படுமா?

Update: 2023-11-05 18:06 GMT

ஆப்பக்கூடல் கீழ்வாணி அருகே இந்திராநகரில் உள்ள சாலை கழிவுநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணி முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் அந்த சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும் போது அந்த சாலை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். விரைந்து சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்