சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-11-05 17:07 GMT

போடி ஒன்றியம் பத்ரகாளிபுரம் கிராமத்தில் இருந்து விசுவாசபுரம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைத்து சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்