சாலையில் பரவி கிடக்கும் கற்கள்

Update: 2023-11-05 16:26 GMT

புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால் இதுவரை சாலை அமைக்கவில்லை. இதனால் ஜல்லிக்கற்கள் சாலையில் பரவி கிடைப்பதால் பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலை அமைக்கும் பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்