கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-11-05 14:46 GMT

கரூர் மாவட்டம், புஞ்சை கடம்பங்குறிச்சி, பெரியவரப்பாளையம் முதல் ஊராட்சி மன்ற அலுவலகம் வரை 3 கிலோ மீட்டர் தூரம் வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

, ,

மேலும் செய்திகள்