சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-11-05 10:22 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் நிலையத்தில் இருந்து பெரிய கோவில் தேரடி வரையிலான சாலை புதுபிக்கும் பணி நடந்தது. இதற்காக பழைய சாலை பெயர்ந்து எடுக்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். சாலை பெயர்ந்து இருப்பதால் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.


மேலும் செய்திகள்