இரும்பு தடுப்புகள் அமைக்கப்படுமா?

Update: 2023-10-29 11:54 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் புதுகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில், சம்பட்டிவிடுதி கீரனூர் நால்ரோடு சாலை சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே விபத்தை தடுக்கும் வகையில் இப்பகுதியில் இரும்பு தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்