போக்குவரத்து இடையூறு

Update: 2023-10-29 08:12 GMT

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்பட்டு வருகிறது. இதில் கோட்டார் மற்றும் பீச் ரோடு பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடுகளில் சுற்றித்திரிகின்றன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாவதுடன், விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சி பகுதிகளில் சாலையில் மாடுகளில் சுற்றித்திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், கோட்டார்.

மேலும் செய்திகள்