புழுதி பறக்கும் சாலையால் அவதி

Update: 2023-10-22 16:47 GMT
குறிஞ்சிப்பாடியில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடலூர்-விருத்தாசலம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாலையில் புழுதி அதிகமாக பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே புழுதி பறக்காத வகையில், டிராக்டர் மூலம் சாலையில் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர். 

மேலும் செய்திகள்