பொதுமக்கள் அவதி

Update: 2023-10-22 09:20 GMT

கோவை சிங்காநல்லூர் மெயின்ரோட்டில் கோத்தாரி மில் சந்து பகுதியில் பாதாள சாக்கடை பணிக்காக ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் கொண்டு வந்து சாலையில் கொட்டி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இன்னும் பாதாள சாக்கடை பணிகள் நிறைவு பெறவில்லை. இதன் காரணமாக அந்த வழியே வாகனங்கள் செல்ல முடியாத வகையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்