போக்குவரத்து நெரிசல்

Update: 2023-10-22 09:17 GMT

கோவை சத்தி சாலையில் ராமகிருஷ்ணாபுரத்தில் இருந்து சரவணம்பட்டி செல்லும் வழியில் தள்ளுவண்டி கடைகளும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்குள்ள ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து ஒழுங்குபடுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்