கால்வாயில் அடைப்பு

Update: 2023-10-22 09:16 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் சாலையோர கால்வாயில் மண் அடைத்து உள்ளது. இதனால் அங்குள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் கால்வாயில் வழிந்தோடுவது இல்லை. மாறாக சாலையில் வழிந்தோடி வருவதால், அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையும் பழுதடைந்து வருகிறது. எனவே அங்குள்ள கால்வாய் அடைப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்