விபத்து அபாயம்

Update: 2023-10-22 08:46 GMT

ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காக்கிறான் குளமும் அதன் கரையோரத்தில் சாலையும் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்த கனமழையில் குளத்தின் கரை சேதமடைந்து சாலையின் ஒரு பகுதி குளத்துக்குள் விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே அந்த பகுதிகளை கடந்து செல்கின்றனர். எனவே, குளத்தின் கரையில் தடுப்புச்சுவர் அமைப்பதுடன், சாலையையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்