கிடப்பில் போடபட்ட சாலை பணி

Update: 2023-10-15 14:22 GMT

சென்னை நாராயணபுரம், சக்கரவர்த்தி நகர், 4-வது தெருவில் சாலை போடும் பணிக்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு 2 மாதங்கள் ஆகியும், பணியை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும், பள்ளி மாணவர்கள், முதியவர்கள் இந்த சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்