கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-10-15 11:56 GMT

கரூர் மாவட்டம், நன்னியூர் ஊராட்சி, துவராம்பாளையத்தில் புதிதாக தார்சாலை அமைப்பதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு உள்ளன. ஆனால் மாதகணக்கில் ஆகியும் இன்னும் சாலை முழுமையாக அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்