விபத்து அபாயம்

Update: 2023-10-08 13:49 GMT

கோவை காந்திமாநகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து எப்.சி.ஐ. குடோனுக்கு திரும்பும் சாலை பல இடங்களிலும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்