சீரமைக்க வேண்டும்

Update: 2023-10-04 14:29 GMT

ஈரோடு மேட்டூர் ரோட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக 2 இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டன. இதனை சரிசெய்வதற்காக அந்த இடங்களில் குழி தோண்டப்பட்டன. குழியை மூடி விட்டாலும் இன்னும் சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்