குண்டும் குழியுமாய் சாலை

Update: 2023-10-04 14:18 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் வடபாதி கிராமத்தில் ஆலடி அம்மன் கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. சிறிது மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி விடுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழும் நிலை ஏற்படுகிறது. மேலும், பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே, சாலையை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்