சாலை அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-10-01 11:44 GMT

நாகை மாவட்டம் தொறக்குடி-திருப்புகழுர் இடையே சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மாற்று பாதையில் வாகனங்கள் செல்லக்கூடிய சூழல் நிலவுகிறது. மேலும், சாலை அமைக்கும் பணியினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்