வேகத்தடை வேண்டும்

Update: 2023-09-27 14:35 GMT


தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பஸ் நிறுத்தம் அருகே பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பகுதியில் இருந்த வேகத்தடை சமீபத்தில் சாலைபணிக்காக அகற்றப்பட்டது.இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருப்பதால் மாணவ-மாணவிகள், மற்றும் பொதுமக்கள் சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்