சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுமா?

Update: 2023-09-27 14:11 GMT

உடன்குடி பேரூராட்சி பிசகுவிளை, கொத்துவாபள்ளி தெரு, பெரிய தெரு, எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அப்போது சில வீடுகளில் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் தெருக்குழாய்களில் குறைந்தளவே தண்ணீர் வருகிறது. எனவே இதனை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்