குழி மூடப்படுமா?

Update: 2023-09-27 11:02 GMT

கோவை அருகே துடியலூர்-சரவணம்பட்டி சாலையில் பெட்ரோல் நிலையம் அருகே சாலையோரம் கேபிள் பதிக்கும் பணிக்காக குழி தோண்டினார்கள். ஆனால் குழியை சரிவர மூடாமல் சென்றுவிட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். சமீபத்தில் கூட மோட்டார் சைக்கிளில் சென்ற குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தவறி விழுந்து காயம் அடைந்தனர். எனவே அந்த குழியை உடனடியாக மூட வேண்டும். 

மேலும் செய்திகள்