வேகத்தடை வேண்டும்

Update: 2023-09-20 16:21 GMT
பழனி நகரில் அடிவாரம் ரோடு, புதுதாராபுரம் ரோடு ஆகியவை போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். சில நாட்களுக்கு முன்பு மேற்கண்ட சாலைகளில் வேகத்தடை அகற்றப்பட்டது. தற்போது வரை வேகத்தடை அமைக்கப்படாததால் வாகன விபத்துக்கள் அடிக்கடி அரங்கேறிய வண்ணம் உள்ளன. எனவே விபத்துகளை தடுக்க மேற்கண்ட சாலைப் பகுதிகளில் மீண்டும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்