வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-09-20 15:03 GMT

சென்னை பாரிமுனை, குறளகம் சந்திப்பில் என்.எஸ்.சி. போஸ் சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணிக்காக சாலையின் நடுவில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் பணி முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. வாகனங்கள் செல்ல முடியாதவாறு சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, உடனடியாக மழைநீர் வடிகால்வாய் பணி மற்றும் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் செய்திகள்