சீரமைக்கப்பட்டது

Update: 2023-02-19 09:48 GMT

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட கடைதெருவில் அலங்கார தரைக்கற்கள் பதிக்கபட்டிருந்தன. கடந்த மழைகாலத்தில் அலங்கார தரைக்கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்தது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். இதுபற்றி தனத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த பகுதியில் அலங்கார தரைக்கற்களை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

-அபுதாய்ரு, குளச்சல். 

மேலும் செய்திகள்