சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-15 08:50 GMT

நாகர்கோவில் பால் பண்ணை சந்திப்பை ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி சாலையுடன் இணைக்கும் பிரதான சாலை உள்ளது. பள்ளி வாகனங்கள், ஆசாரிபள்ளத்துக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் என எப்போது இந்த சாலை பரபரப்பாக காணப்படும். நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் முன்பாக செல்லும் இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகளும், உள்ளே இருக்கும் நோயாளிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்