சீரமைக்கப்பட்டது

Update: 2023-02-12 07:19 GMT

அழகியமண்டபத்தில் இருந்து திருவட்டார் செல்லும் சாலையில் செவரக்கோடு அருகே குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு அதன் வால்வு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சாலையின் நடுவே உயரமாக அமைந்திருந்ததால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வந்தது. இதுபற்றி 'தினத்தந்தி புகார்பெட்டி'யில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் வால்வு தொட்டியின் உயரத்தை சீரமைத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்