சிறு பாலம் பழுது

Update: 2023-02-22 15:54 GMT

பேரணாம்பட்டு ஆயக்கார வீதியின் கடைசியில் இந்துக்கள் சுடுகாடு உள்ளது. அதன் அருகில் சிறு பாலம் உள்ளது. அந்தப் பாலத்தின் அஸ்திவாரம் பாதிக்கப்பட்டு, ஒரு பக்கமாக சாய்ந்துள்ளது. இறந்தவர்களின் உடலை இந்தப் பாலத்தின் வழியாகத்தான் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். எனவே அசம்பாவிதம் நடக்கும் முன் நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடவடிக்கை எடுத்து பழுதான சிறு பாலத்தை புதுப்பித்துத் தர வேண்டும். இல்லையேல், புதிய பாலம் கட்டித்தர வேண்டும்.

-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்