வேகத்தடைகளால் இடையூறு

Update: 2023-09-03 17:39 GMT

வாணியம்பாடிக்கு அருகில் வளையாம்பட்டு கிராமத்தில் சாலையின் குறுக்கே 10-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் உள்ளன. அந்த வேகத்தடைகளால் இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகனத்தில் செல்வோரின் என்ஜின் அடிபட்டு சேதமாகிறது. பலர் இருசக்கர வாகனத்துடன் கீழே விழுகிறார்கள். எனவே வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க வேண்டும் அல்லது வேகத்தடைகளை அகற்ற வேண்டும். இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-எம்.காமராஜ், வாணியம்பாடி. 

மேலும் செய்திகள்