ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2026-03-01 18:50 GMT

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில், காமராஜர் தெரு தொடக்கம் முதல் முடிவு வரை இரு பக்கமும் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டிட கழிவுகளும் சாலையோரம் உள்ளது. இதனால் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவளூர்பேட்டை செல்லும் சாலையோரம் இளநீர் வியாபாரிகள், ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. அதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ராமு, கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்